tamilnadu

img

உயிரிழந்த அர்ச்சகர் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பண மூட்டைகள்!

ஆந்திரா மாநிலத்தில் உயிரிழந்த அர்ச்சகர் வீட்டில் இருந்து சிறு சிறு பண மூட்டைகளை பொதுமக்கள் கண்டெடுத்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் துனி என்னும் பகுதியை சேர்ந்தவர் 70 வயதான அப்பலா சுப்பிரமணியம். சில வருடங்களுக்கு முன்பு, இவர் கோவில் அர்ச்சகராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி இறந்த பிறகு, சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் அர்ச்சகர் பணியில் இருந்து நின்றுவிட்டார். இவருக்கு ஒரு மகன் இருந்த நிலையிலும், கவனிக்க யாரும் இன்றி சுப்ரமணியம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களாக இவர் வீட்டை விட்டு வெளியே வராததால், சந்தகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். 

அப்போது சுப்ரமணியம் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது மகனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும், அவரது வீட்டில் அங்கங்கே சிறு சிறு மூட்டைகள் இருந்தது.  அதில் என்ன இருக்கிறது என்று பார்த்தபோது, நாணயம், பணம் போன்றவை குவியல் குவியலாக இருந்ததும், அந்த பணத்தை எண்ணி பார்த்ததில் ஏறக்குறைய 6 லட்சம் வரை பணம் இருந்தது தெரியவந்தது. 

;